Sunday 16 March 2014

so simple

சிறுமி வரையும்
ஓவியங்களில் எல்லாம்
ஓர் இளவரசன் இருக்கிறான்
இளவரசர்கள் வரையும்
ஓவியங்களில்
இளவரசிகளே இருப்பது குறித்து
சிறுமி வருந்துவதில்லை
கிரீடம் வரைந்தால்
அவன் இளவரசன்
அழித்துவிட்டால்
குதிரைத் தொழுவ ஊழியன்
சிரித்துவிட்டு சொல்லுவாள்
so simple

No comments:

Post a Comment