Sunday 16 March 2014

புதிதில்

நீரைக்கிழித்துப் பயணிக்கும்
ஒற்றைப் படகில்
புதுமஞ்சள் தாலியுடன்
இருந்தவளிடம்
அருவிக்கரைச் சுழல்களில்
சிக்கி உயிரழந்தோரின்
கதைகள் சொல்லி
முத்தாய்ப்பாய்
உச்சியில் உள்ளங்கைப் பதித்து
ஆசீர்வதித்த
சாராய நெடியுடனான
அந்த பாணதீர்த்தப்
படகோட்டிப் பெரியவரையும்
வயிற்றில் கருவின்
இருப்பறியாது
ஓடித் திரிகையில்
பாதம் குத்தி உட்புகுந்த
ஏற்காடு மலை முள்ளும்
மற்றோர் முறை
காணவேனும்
நீண்ட பயணமொன்று
மிக அவசரமாய்
தேவைப்படும் பொழுதுகளிலும்
பயண சுவாரசியமாய்
கண்டடைந்து விடுகிறேன்
வனம் துறந்து
வான் கடக்கும்
அந்தச் சிறிய
நீலப் பறவையை

No comments:

Post a Comment