Sunday 16 March 2014

தீ நதி

அத்தனை அரூபமாய்
பாய்ந்துகொண்டிருந்தது
அந்த நீல நதி
அவர்களிடையே

எத்தனை தொலைவையும்
கடந்திடக் கூடியது
புகையெழும்பி அனல்
சொன்னது 

அவன் வெப்பமெல்லாம்
வழிந்தோடி
அவள் கரைசேரும்
குளிர்விப்பது மட்டுமே
அவள் தொழிலாகும்

கெட்டித்து கெட்டித்து
மலையாகிக் கொண்டிருந்தான்
உள்ளுக்குள் தணல் சுமந்து

இதழ் படிந்த ஈரம்
ஒற்றியெடுத்த விரல்களில்
துளி தீ

நதியில் மூழ்க
உடைகள் எரிந்த உடல்கள்
மட்டுமே தேவையாய் இருந்தது
நதிகளுக்கும்

No comments:

Post a Comment