Sunday 16 March 2014

வலி

சந்தைக்காகாதப் பொருளென
ஒதுக்கப்பட்டப் பிறகு
மூலையில் அமர்ந்து
தனதெல்லாம் 
அந்தப் புத்தகத்திடம் தந்து
மெய்மறந்துக் கிடக்கும்
அவளை 
நானறிந்த அளவிற்கு
அவர்கள் அறிந்ததில்லை
நல்லது
அவர்கள் அறியவில்லை

------------------------------------------
தொண்டையின் வெகுஅருகில்
அத்தனை நீள ஊசி
இறங்கியபோது
பெரிதாய் வலியில்லை
வெண்பஞ்சு ஒத்தி சிவப்பாய் எடுத்த
செவிலி ஆதுரமாய்
நெற்றி தடவுகிறாள்
முழுவீச்சில் செயல்பட்டு
அத்தனை சீழையும்
வெளிக்கொணர முயலும்
மருத்துவர் ஏன்
இத்தனை சாந்தமாய்
இருக்கிறார்
முடிவுகளை அவர்கள்
ஆராயும் வேளை
ஏதேனும் நகைச்சுவைக்காட்சி
ரசித்து சிரித்துக்கொண்டிருப்பாள்
நாளையும் வருவாள்
அதே புன்னகையோடு
ஊசி இறங்கும்முன்
செவிலியின் கரம்பற்றி
அழுத்துவாள்
வலிகடத்தியதாய் நம்புமவளை
கண்டு காற்றில் படபடக்கும்
மருத்துவமனை நாட்காட்டி


No comments:

Post a Comment