Sunday 16 March 2014

சரணாலயம் எது

வரைபடத்தில்
தவறான இடத்தில் குறித்துவிட்டேன்
பறவைகள் சரணாலயத்தை
கிர் சிங்கங்களுக்கானது அல்லவா
கன்ஹா புலிகளோ
சரிதான்
ஒரிஸ்ஸாவிலிருந்து தவறி
வேறெங்கெல்லாமோ
விழுந்திருக்கிறேன்
இடையில் ஒரு மரப்பாலம் செல்ல
சுற்றி வலைகளால் பின்னியிருந்த
மைசூர் பூங்காவில் இளரோஜாவண்ணத்தில்
அந்தப் பிளெமிங்கோ பறவைகளைக்
கண்டபோதும்
இதே குழப்பம்தான்
இவைகளின் எத்தனையாவது
பரிணாம வளர்ச்சியில்
கிர் அல்லது கன்ஹா சென்றடையும்
அடைந்துதான் கிடப்பதாயின்
சிறகுகளைவிட
பிடரியும் வன்மமும் மேல்
புலியின் வாலுடன்
ஒரு பிளெமிங்கோ காணும்போது
நான் மிகச்சரியாய்
குறித்துக்கொண்டிருப்பேன்
சிலிகா ஏரியில்
பாண்டாக்களின் பூங்காவை

No comments:

Post a Comment