Sunday 16 March 2014

கள்வெறி

இன்று முழுதாய்
ஒரு நிலா காய்ந்தது
மிக அருகில்
கொஞ்சம் கொஞ்சமாய்
களங்கம் வழித்தெடுத்து
நெற்றிப் பொட்டென
வைத்துக் கொண்டதும்
அது நிலா போலவே இல்லை
சில அடி தொலைவில்
விலகி நிற்கும் போது
தெளிவாய் தெரிந்திருக்கும்
இரண்டாம் சிலுவையும்
பாரமிழந்திருந்தது அப்போதைக்கு
இங்கிருந்து விழுந்த
கண்ணீர் துளிகள்
மீதி களங்கமும்
அகற்றியிருக்கலாம்தான்
எனினும்
களங்கமுற்ற நிலாக்களே
கள்வெறி கொள்ள
வைக்கின்றன
எப்போதும்


------------------------------------------------------
எரிமலைச் சாம்பல்
படிந்திருந்த நீலச்சிறகுகளை
அலச
ஒரு மழை வேண்டியிருந்ததுதான்
அதோ உருகி வழிகிறது
சிறகுகள்
இது அமிலமழையெனில்
அத்துனை குளிர்மை
எப்படிச் சாத்தியமென
யூகிக்கவும் அவகாசமின்றி
மரணிக்கிறது பறவை
நீலம் பாரித்திருந்தது வானம்


----------------------------------------------------------

No comments:

Post a Comment