அத்தனை வேகமாய்
தலையாட்டி
ஆமோதித்துக் கொண்டிருந்தது
அத்தனைப் பெரிய
வேப்பமரம்
பொழியட்டுமா
என வினவிய
முகிலுக்கான விடையது
என
முற்றுப்புள்ளி வைத்தது
முதல் துளி
------------------------------------------
இந்த இரவைக்
கடந்து கொண்டிருக்கிறேன்
என்பது
எனக்கு அயர்வையும்
என்னைக் கடந்து கொண்டிருப்பது
இந்த இரவிற்கு
அதிர்வையும்
தரலாம்
நன்று
நாளைய இரவும்
நாளைய நானும்
இன்றிலிருந்துதொடங்கியாயிற்று---------------------------
----------------------------------------------------------
விரல்களிடை ஓடும்
மருதோன்றிக் கொடியெங்கும்
பூத்திட்ட
செவ்வரளி வருடிச்
செல்கிறது ஈரக்காற்று
காய்ந்து உதிரும்
கரும்பச்சையில்
நீள்மலை விளைந்த
தைலமர வாசம்
செதில் செதிலாய்
படிந்து கிடந்திட
உள்ளீடாய் நுகரலாம்
இரவின் வாசனை
------------------------------------------------------------
தலையாட்டி
ஆமோதித்துக் கொண்டிருந்தது
அத்தனைப் பெரிய
வேப்பமரம்
பொழியட்டுமா
என வினவிய
முகிலுக்கான விடையது
என
முற்றுப்புள்ளி வைத்தது
முதல் துளி
------------------------------------------
இந்த இரவைக்
கடந்து கொண்டிருக்கிறேன்
என்பது
எனக்கு அயர்வையும்
என்னைக் கடந்து கொண்டிருப்பது
இந்த இரவிற்கு
அதிர்வையும்
தரலாம்
நன்று
நாளைய இரவும்
நாளைய நானும்
இன்றிலிருந்துதொடங்கியாயிற்று---------------------------
----------------------------------------------------------
விரல்களிடை ஓடும்
மருதோன்றிக் கொடியெங்கும்
பூத்திட்ட
செவ்வரளி வருடிச்
செல்கிறது ஈரக்காற்று
காய்ந்து உதிரும்
கரும்பச்சையில்
நீள்மலை விளைந்த
தைலமர வாசம்
செதில் செதிலாய்
படிந்து கிடந்திட
உள்ளீடாய் நுகரலாம்
இரவின் வாசனை
------------------------------------------------------------