Saturday 12 April 2014

அரங்கேறுபவள்

கிளியோபாத்ராவின் உடல்
நீலம் பாரிக்கும்
முன்னரே
ஏன் வெளியேறினீர்
திசையறியா விடம்
உங்கள் பாதங்களின்
பின்னே
தொடர்வதை
நீங்கள் எப்போதும்
அறியப்போவதுமில்லை

-----------------------

கோட்டையின் மதில்கடந்து
தவழும்
தனது அத்தனை நீள
தலைமுடி மூலமாய்
காதலனை
உள் அழைத்த ரபுன்செல்
பாத்திரமேற்று நடிப்பவள்
மறக்காமல்
ஜன்னல்களை அடைத்துவிட்டே
இரவுகளில் உறங்குகிறாள்
ஆம்
தலைமுடியை
முடிந்துகொண்டும்தான்

----------------------

மார்புகளிடை ஆழமாய்
இறங்கியிருந்த
அட்டைக்கத்தியை
ஒப்படைக்காமல்
அரங்கை விட்டு
வெளியேறுபவளை
பரிதாபமாய் பார்க்கும்
திரைச்சீலைகள்

----------------------

No comments:

Post a Comment