Tuesday 8 April 2014

இலக்கியப் புழு

இலக்கியவாதியாக
என்னவாக வேண்டுமென
முதல் புழுவிடம்
கேட்டது இரண்டாவது

நீ பிறந்த இடம்
நீ பிறந்த குலம்
நீ பெண்ணெடுத்த
அல்லது பிள்ளையெடுத்த இனம்
நீ வாழும் வீதி
எல்லாம் கொண்டு
நிர்ணயிப்போம்
நீ இலக்கியவாதியாவென

முதன்மையாய்
நீ முகநூலில் இருத்தல் அவசியம்

உன்னைப் பற்றி
உன் இனமானவன்
உன்னைப் போற்றி
வெளிக்கொணர்தல்
அதைவிட அவசியம்
என்றது
முதல் புழு

இலக்கியமென்பது
இதில் எங்கு வருகிறது
மீண்டும் வினவியது
இரண்டாவது புழு

இது மட்டுமே
இலக்கியமெனச் சொல்லி
தடியூன்றி நடந்துச் சென்றது
முதல் புழு

No comments:

Post a Comment