Monday 21 April 2014

தீட்டுத்துணிகள்

அவளின்
தீட்டுத்துணிகளைப் பெற்று
பணப்பெட்டியில்
பத்திரம் செய்யக்
காத்திருந்தவர்களின்
வீடுகளின்
கொல்லைப்புறங்களில்
மட்கிய தீட்டுத்துணிகள்

------------------------------------------------

கற்பூர ஒளியில்
மட்டுமே
லயித்திருந்தவர்களைக்
கண்டதும்
அவள் சுட்டுவிரல்
அசைந்ததை
நீங்கள் எவருமே
கவனிக்கவில்லை

-------------------------------------------------
துள்ளு மாவில்
கலந்திருந்த
வேப்பங்கொழுந்துகளை
ருசி பார்த்ததும்
கசந்து நகர்ந்த
பசும் வெயில்
பானகத்தில் கால் நனைத்து
மெல்ல முன்னேறுகிறது
படையல்களுக்காய்
நேர்ந்து விடப்பட்டவளின்
மஞ்சள் பாதங்கள் நோக்கி

--------------------------------------------------

No comments:

Post a Comment