Tuesday 8 April 2014

அலைகள்

கொலுசுக்கால் பற்றி
மேலேறும் நுரையலை
அலைகள் பற்றி
கடல் உடுத்த முயலும்
அவள்

------------------------

தொட்டு அழைக்கும்
அலைகளுடன்
செல்ல மறுக்கும்
கரையோரப் படகு
ஒற்றைப் பலூனுக்கும்
சில முத்தங்களுக்கும்
நினைவுக்காவலாய்

------------------------

இருசிப்பிகள்போல்
வானும் கடலும்
பிளந்திருக்க
இருள்சொட்டாய்
நுழைகிறது இரவு

-----------------------
ஆர்ப்பரித்தக் கடல் ரசித்தச்
சிறுமி தவறவிட்ட
ஆரஞ்சு மிட்டாய்
ரகசியமாய் வந்து வந்து
ருசித்துச் செல்கிறது
குழந்தை அலை

-----------------------

கரையோரச் சிறுவன்
விடுத்தப் பட்டத்தின் நிழல்
பத்தொன்பதாம் அலையில்
பட்டத்திற்காய் அழுத
சிறுமியின் காலடி
வந்து சேர்ந்தது

----------------------

No comments:

Post a Comment