Thursday 28 March 2013

உறைந்த பெண்மை

அந்தச் சிற்பம் கண்டு 
வியந்து நிற்கிறேன் 
இத்தனை நேர்த்தியும் 
சமரசமில்லா கலைநயமும் 
கொண்டிருந்த 
சிற்பியின் விரல்களை 
சிறப்பாய் அவதானிக்கிறேன்
எத்தனை கோடி விழிகள்
இதனை
தழுவிச் சென்றிருக்கும்
வியக்கிறேன்
கல்லாய் உருக்கொள்ளுதல்
பெண்மைக்கான மறைசேதியோ
ஐயமுறுகிறேன்
பயன் குறித்தெல்லாம்
வாதம் செய்வோரை
புறம்தள்ளி மென்வருடல்
புரிகிறேன் 


சில நொடிகள்
சிற்பமாய் சமைகிறேன்
கூர் உளி பட்ட வலி
உறைக்க நேர்கிறேன்
இதே நொடி
சிற்பத்தினுள்ளும்
சில நரம்புகள்
வேரோடியிருக்கலாம்
ஆம் உணர்கிறேன்

1 comment: