Thursday 28 March 2013

உன் நான்

நிழலை மட்டும் கவர்ந்து 
செல்பவனை 
அமைதியாய் பார்க்கிறேன் 
நாளை முழுதாய் 
கொள்ளைபோகும் 
தீர்மானத்துடன்

**************************

நம் கரைகளின் 
மணற்துகள் சுமந்து 
வந்த கடலெங்கும் 
உன் சொற்களின் 
இரைச்சல்

***************************

கைக்குட்டைகள் 
இடம் மாறிய நொடி
இருவர் வாசமும் 
குழம்பித் தவித்து 
கலந்துத் தெளிந்தது

***************************


சட்டைப் பொத்தானில் 
சிக்கிய ஒற்றைப் பார்வை 
பிரித்தெடுக்கவும் 
பலமற்றவளை 
உன் பார்வையால் 
தாங்குதல் நலம்

****************************

மறந்து போனதாய் 
நடிக்கவும் முடியாத 
பொழுதுகளில் மட்டும் 
கர்வமிழந்து சரணாகிறேன் 
உன் நினைவுகளிடம்

*****************************

No comments:

Post a Comment