Thursday 28 March 2013

இரவின் பிடியில்

அரண்மனை
இரவுகள் அடர்ந்தும் 
சாமானியன் 
இரவுகள் நீண்டும் 
திரிகின்றன

************************

ஒரு இரவைத் 
தாலாட்டி 
உறங்க வைக்கவே 
இத்தனை இரவுகளும் 
முயல்கின்றன

************************

இருண்மை தீட்டிய 
நகரின் வீதியில் 
எங்கோ ஓடி 
ஒளிகிறது 
இரவின் சலனம்

************************

பைத்தியக்காரனின் 
பிதற்றலாய் 
துவங்கும் இரவு 
மழலையின் 
குழறலாய் நீண்டு 
ஞானியின் 
மௌனமாய் விடியலாம்

***********************


No comments:

Post a Comment