Thursday 28 March 2013

வாசம் மொய்த்த வரிகள்



சமீபத்தில் பிரசவித்தவள்
இல்லம் நிறைந்திருக்கும்
தாய்மை நெடி

மதிய உணவு இடைவேளை
பள்ளிகள் சுமந்திருக்கும்
பசி வாசனை

விளைந்த பயிரெல்லாம்
பால் பிடிக்கும்
மகிழ் மணம்

சூழலேதும் பாராது
உணர்வுகள் எழுப்பும்
மோக நாற்றம்

மலைப்பாதை முழுதும்
சிதறிக்கிடக்கும்
வன வாசம்

இறப்பொன்றை
அறிவித்து செல்லும்
ரோஜா வீச்சம் 

இந்த வரிகள் மொய்த்து
ஆடைவிலகி கிடக்கும்
கோப்பை தேநீர்

எல்லாமும்
நிறைத்துக்கொள்ளும்
ஒற்றை நாசி
சுவாசிக்கவும் செய்யும்

No comments:

Post a Comment