Thursday 28 March 2013

முளைப்புகள்




துரோகம் இடறி
மண்ணில் வீழும்
சூனிய நொடிகள்
சிறு விதைகளாகி
ஆழப் புதைந்து
மூளை கீறி
வெடித்து வெளிவர
துளிர்கள் எங்கும்
விரவும்
அனிச்சை உள்ளுணர்வு
உந்த பூத்திடும்
குறுமலர் கொய்து
மனதால் செய்த
சுண்டுவிரலொன்றில்
அழுந்தப் பதிக்க
சிதறும் மகரந்தமெங்கும்
துரோகத்தின் வீச்சம்
பரவ
சுமக்கவியலா பாரமாய்
நிலமெங்கும்
அதே முளைப்புகள்

No comments:

Post a Comment