Thursday 28 March 2013

என் நான்

தனித்தலையும் இரவின் 
நெடுஞ்சாலைதனில் 
விழித்திரையில் குத்திட்டு 
நிற்கும் விண்மீனுடன்
மழலையின் விரல்கள்
ரவிக்கை பற்றிக் கிடக்க
செவிவழி புகுந்து
சிந்தை நனைத்திட்ட
இசையின் சர்வாதிகாரம்
ருசித்து
தன்னிலை மறந்த
ஏகாந்த நொடியொன்றில்
தன்னிச்சை செயல்போல்
நிகழ்ந்த
பாத உரசலில்
எங்கிருந்தோ
என்னுள் விழுகிறேன்
நானற்ற நானாகிட

No comments:

Post a Comment