Thursday 28 March 2013

புள்ளிகள்

பெருநகர வீதியோரம் 
கிளைத்தெழும் செடிகள் 
பேரிரைச்சல் 
பருகியும் 
வாழப் பழகுகின்றன

**************************

ஈசலொன்றின் பின் 
ஓடிய பார்வை 
குழல்விளக்கில் தொங்கும் 
எண்ணெய் படர்ந்த
தாளில் ஒட்டியது 

கொஞ்சம் கொஞ்சமாய் 
உதிரத் தொடங்குகிறது 
பார்வையின் 
கண்ணாடிச் சிறகுகள்

**************************

பெயர் தெரியா 
பறவையொன்றின் 
எச்சத்தில் விளைந்த 
மரத்தினின்று 
விழும் முதல் கனி போல் 
நழுவும் பேறு 
பெற்று விடுகின்றன 
சில சொற்கள்

***************************

No comments:

Post a Comment