Thursday 28 March 2013

திரிபுக் காட்சியின் சூத்திரதாரிகள்

அக்கறையாய் 
எந்த அந்தரகத்தினுள்ளும் 
எளிதாய் நுழையலாம்

சுண்டி எறிந்த
கண்ணீர்த்துளிகள்
உகுத்தவர் அறியாது
சேமித்து
சபையில் ஏளனம்
செய்யலாம்

ஒரு கிழிசலின்
வழிப் புலனாகும்
அனைத்திலும்
வக்கிரம் பதியலாம்

ஊசிமுனை
அழுத்தம் தந்து
சூழலெங்கும்
நஞ்சு பாய்ச்சலாம் 


நட்புக் காதலாகவும்
காதல் மற்றொன்றாகவும்
திரிந்து போக
துணை போகலாம்

எல்லாம் செய்யலாம்
இயல்பாய் திரியலாம்
நமக்காய் எல்லாம்
செவ்வனே ஆகும்வரை

No comments:

Post a Comment