Friday 29 March 2013

இரவின் துளிகள்

தறிகெட்டோடும் இரவினின்று 
இடறி விழும் போதெல்லாம் 
ஏந்திக்கொள்ள 
ஒரு விடியல் 
வந்து விடுகிறது 

*************************************************

திட்டமிடப்படாத 
ஒற்றை இரவின் 
விளிம்பில் ஊசலாடுகிறது 
உலகின் அத்தனை 
நெறிகளும்

*************************************

பகலை வெல்ல 
ஒரு சொல்லும் 
இரவை வெல்ல 
ஒரு அணைப்பும் 
போதும்

**************************************

இருள்மழை பொழியும் 
ஒரு இரவின் தூய்மை 
உள்ளங்காலில் பதிந்த 
முத்தம் போலவே 
புனிதமானது

**************************************
பாய்ந்தோடி வரும் 
இந்த இரவால் 
அடித்துச் செல்லப்பட்டு 
ஒதுங்கலாம் 
யாரோ ஒருவரின் 
கனவுக்கரையில்

**************************************

No comments:

Post a Comment