Thursday 28 March 2013

குறுங்கவிதைகள்

வனமெரிக்கும் 
அக்னிக் குஞ்சுகளை 
வீட்டினுள் பொதிந்து 
விளக்கின் சுடராக்குதல் 
விருப்பத்திற்கு 
அணைத்திடவே

**************************


வெயில் உருக்கிய 
தார்ச் சாலை
பாதம் அழுந்தி 
உள்செல்லும்போது 
பூமியை அழுத்திய 
பெருமிதம்


***************************


தீவிரமாய் எழுதிக் கொண்டிருக்கும் 
தாயின் பின்னிருந்து 
கண்கள் பொத்தும் மழலைபோல் 
அமைந்து விடுகின்றன 
சில வரிகள் 
இருப்பது தெரிந்தும் 
காட்டிக் கொடுக்க 
மனமற்று


*****************************





No comments:

Post a Comment