Saturday 30 March 2013

நிகழ்தலின் துளிர்ப்பு




இறந்துபோனக்  காலங்களை 
மனவெளியெங்கும் 
புதைத்து  
நீரூற்றவும் மறுத்து 
வெற்றுணர்வு களையெடுத்து 
நேசமேகம் நீந்தா நிலம் கீறி 
மௌனித்தப்  பொழுதொன்றில் 
நிகழ்தலின் நக இடுக்கில் 
பெயர்ந்து வந்தது 
எனக்கே எனக்காய் 
துளிர்விட்ட நினைவொன்று 





No comments:

Post a Comment