Thursday 28 March 2013

தெரியாமலேயே போயிடுச்சு

கண்ணாலத்துக்குக்  கட்டுன 
கூறைப்புடவை எடுத்து 
உத்தரத்துக்  கழியில 
இறுக்க முடிச்சுபோட்டு 
ஒண்ணுக்கு ரெண்டு வாட்டி 
இழுத்து பலம்  பாத்து 
புள்ளயக் கெடத்த 
சரியான உசரம் வெச்சு 
அம்சமான தூளி ஒண்ணை 
நல்ல நேரத்திலக் கட்டி 
பழைய பருத்தித்துணியில 
பொறந்த சிசுவைப்  பொதிஞ்சு 
ஒருகையில புள்ளைய ஏந்தி 
மறுகையில தூளி வெலக்கி 
தூங்கறப்  புள்ளைய 
அலுங்காம சாய்ச்சி 
காத்தோட்டத்துக்கு 
நடுவுல கட்டை வெச்சு 
பூமேல பூ வெக்கற மாதிரி 
மெலுக்கா ரெண்டு ஆட்டு ஆட்டி 
சன்னமா ஒரு பாட்டையும் பாடி 
எல்லாம் முடிஞ்சுதுன்னு 
சமையக்கட்டு பக்கம் போனா 
தரையில ஈரக் கோலம் போட்டு 
சிணுங்கறப்  புள்ளைய
வாரியெடுத்து பால் 
குடுக்குற சுகமெல்லாம் 

ராவெது பகலெது தெரியாம 
எதையோ தொலைச்சு 
என்னென்னமோ  வாங்க 
வம்பாடுபட்டு ஓடி ஓடி ஒழைக்கிற 
நகரத்துக்கு வாக்கப்பட்ட 
எம் மவளுக்கு 
தெரியாமலேயே போயிடுச்சு 


No comments:

Post a Comment