Wednesday 25 June 2014

பெயல் பரவசம்

பெயல் பொழுதுகளில்
இன்னும் பெரிதாய்
திறந்து கொள்கிறது
வாசல்
மஞ்சள் கொன்றை

-----------------------------------

உச்சியில் கிடந்த
ஒற்றை வேப்பம்பூவுடன்
முழுதாய் நனைந்து
இல்லம் நுழைகிறாள்
சிறுமி

சிசுவைத் தொடுவதுபோல்
பூவை ஸ்பரிசிக்கிறாள்
தாய்

உடல் சிலிர்த்த
வேப்பமரம்
மழையை அசைத்து
தானும் அசைகிறது

நிலத்திலிருந்து எழும்பி
வானில் பொழியும்
பச்சை மழையாகி

நிற்கிறது

----------------------------------------------

No comments:

Post a Comment