Wednesday 26 February 2014

மார்புகளிடை ஒட்டும் பாலைமணல்

நீலமலர்கள் சிந்திக்கிடந்த
பாதைகளை
நினைவுகளால் கடந்துவிட்டதாய் 
எத்தனைதான் நடிப்பது
பாதக்கொப்புளங்கள் வெடித்துத்
தடுமாறி வீழ்ந்தபோது
இதழ்களில் ஒட்டியப்
பாலைமணலை
எந்த மார்புகளினிடையில்
புதைப்பது
யுகங்களின் பசியோடு
துரத்தும் செந்நாய்போன்ற
காலத்தை
எந்த மணல்கடிகையில்
அடைப்பது
நுரைத்த அலைகளின்
ஆயுளொத்தக்
காதல்களுக்காய்
எத்தனை முறை
மரிப்பது
கருப்பு வெள்ளை வனம்போலும்
விரிந்து கொண்டே செல்லும்
இந்தக் கனவை
என் செய்வது

திடுக்கிட்டு விழிக்கையில்
முகத்தருகே இருந்து
நொடிமுன்னர் விலகியதாய்
தடயம் விட்டுச்சென்ற
அந்த பிம்பத்தையும்தான்
எப்போது மன்னிப்பது

No comments:

Post a Comment