Wednesday 26 February 2014

சிறுதுளிகள்

அருவியின் அருகில்
அமைந்திருக்கும்
உடைமாற்றும் அறைபோல்
இருக்கும் உன் மனது
அத்தனை ஈரமாய்
அத்தனைக்
காலடித் தடங்களுடன்

----------------------------------------------------

பச்சை மரம் 
அறுபடும் வாசம்
மலையுச்சிக் கோவில்
மதிற்சுவர் விரிசல் கிளைத்த
அரசமர வேர் குளுமை
பெருகிய குருதி தடுத்திட்ட
பச்சைக் கற்பூரத் தகிப்பு
கடந்து செல்வோரை
ஏளனமாய் நோக்கும்
அரிய மூலிகைச் செருக்கு

இதிலெது மிதந்தது
மயிரடர்ந்த மார்பில்
அன்றென வினவவும்
பதிலுரைக்கத் திறந்த
இதழ்களில் இருந்தது
என்ன
மரமறியாது மண்தொட்டப்
பழ மணம்


---------------------------------------------------------

No comments:

Post a Comment