Wednesday 26 February 2014

கல்லறைப் புத்தகம்

அணுவளவும் மிச்சமின்றி
எங்கும் இறக்கிவைத்தாயிற்று
வைர ஊசிகளை
எலும்புமஜ்ஜையில் நிரடி
கூர்முனைகள் செதுக்கியவை
பல சமயம் கவிகளாய்தான்
மாறியிருந்தனவாம்
இடப்பற்றாக்குறையால்
இறுதியாய் 
விழிமணி மையத்தில்
அவர்கள் செருகிய
ஊசிநுனியில் பளபளத்த
ஒளியின் கூர்மையை
மட்டும்தான்
இன்றுவரை
வியந்து கொண்டிருக்கிறேன்


---------------------------------------------

எத்தனைப் பேர்
கவனித்திருக்கக்கூடும்
அடுக்கிவைத்தப் புத்தகங்கள்
போலவே
மிகச்சரியான இடைவெளிகளோடிருந்தக்
கல்லறைகளை
புத்தகச்சந்தை வாயிலில்

துரிதமாய் பேசியபடி
தொடர்ந்து சிரித்தபடி
நண்பனுடன் அவற்றைக்
கடக்கும்போது
சுற்றுச்சுவர் கடந்து
வெறிக்கும்
பொறிக்கப்பட்டப் பெயர்கள்

இறுதியாய் படித்தப் புத்தகத்தோடே
சவப்பெட்டிக்குள்
இறங்கியவரின் விழிகளில்
நிலைத்திருந்த
வரிகள் போல
கனக்கத் தொடங்குகிறது
காகித மூட்டை
முதன்முறையாய்


----------------------------------------------

No comments:

Post a Comment