Friday 11 October 2013

பேசுவதற்காய் ஒரு கவிதை

எதிரில் அமர்ந்திருந்த
ஒரு கவிதையிடம்
பேசிக் கொண்டிருந்தேன்
என் விழிகள் கடந்து
என் பின்னே விழிகள்
நிலைத்தது அக்கவிதைக்கு
தன்னிச்சையாய்
நானும் திரும்பிப் பார்க்கிறேன்
வைரங்கள் பதித்த மின்னலென
கடந்து கொண்டிருந்தது
மற்றோர் கவிதை
பேச்சை மறந்திட்ட
இக்கவிதை
இனி செப்பிடும் வரிகளில்
மின்னலின் நிழலிருக்கலாம்

No comments:

Post a Comment