Friday 11 October 2013

ரிஸ்வன் லவ்ஸ் சலோமி

அடர்ந்த வனம்போலும்
சூழலிடையில் 
பூட்டியக் கதவுகளின் பின்
கூப்பியக் கரங்களுடன்
அனுமன்
பல்வேறு ப்ரார்த்தனைகள்
துண்டுக்காகிதங்களில்
மாலைகளாகக் கிடக்கின்றன
கம்பிக்கதவிடையே தரிசித்து
ஆழ்ந்து ஸ்வாசித்து
மொத்தமாய் நிரப்பிக்கொண்டேன்
கருவறை வாசம்
இந்த வாசம் நுகரும்
நொடிகள் மட்டும் ஏன்
உள்ளெல்லாம் மணக்கிறது
சிறுகோயில் சுற்றிவர
சுவரெல்லாம் கிறுக்கல்கள்
தேர்வில் மதிப்பெண் பெறவும்
உலகம் உய்யவும்
காதல் கைகூடவும்
சரிதான்
அனுமனுக்கேற்ற வேலைதான்
எனினும்
கணையாழி தந்துச் சென்றனரோ
அவனிடம்
தெரியவில்லை
பளிச்சென பெரிய
எழுத்தில் மின்னிய ஒன்று
மிக வசீகரித்தது
ரிஸ்வன் லவ்ஸ் சலோமி

No comments:

Post a Comment