Friday 8 August 2014

இரவுகளின் பின் அலைபவள்

இரவுகளின் பின் அலைபவள்
குறித்து 
உங்கள் மதிப்பீடுகள் 
அனைத்தையும் பரிசீலிக்கிறாள்
அவள்

நோய் முற்றியவள்
மனநல ஆலோசனை வேண்டியிருப்பவள்
பகலில் உறங்குபவள்
காமம் தீராதவள்
காலைச் சமையலுக்கு
பணிப்பெண் அமர்த்தியிருப்பவள்
என
இன்னும் பல

ஒரு கனவில் இருந்து
மற்றொன்றிற்குச் செல்கையில்
வழிதவறி இங்கு
வந்துவிட்டவள் அவள்
என்பதை
ஒரு மரங்கொத்திபோல்
உங்கள் இரவுகளைப்
பிளந்து கொண்டிருக்கும்
ஏதோ ஒன்று
மிகச்சரியாய் மதிப்பிட்டதை
ஏன்
அன்று உதாசீனப்படுத்தினீர்?

No comments:

Post a Comment