Wednesday 13 August 2014

மாதுளைக் கண்கள்

விலகி இரும் ஈசனே
நீண்ட அலகுடன் 
பட்சியென வந்த
உமக்கான
கடைசி தானியத்தை
விதைத்துவிட்டேன்

இனி அதில் பழுக்கும்
நெற்றிக்கண்களை
மாதுளை முத்துக்கள் போல்
உடைத்துக் கொறிப்பேன்

No comments:

Post a Comment