Friday 8 August 2014

பிணங்களின் நகரம்

பிணங்களின் நகரம்
-------------------------------

வாசல் வாதாம் மரத்தின்
வேர்கள்
ஒரு பிணத்தின் கரம்பற்றிக்
கிடந்திருக்கும்

இன்று தலைமேல் உதிர்ந்த
மஞ்சள் மலரில்
முந்தைய
மழலைப் பிணத்தின்
விழித்திரை அசைந்திருக்கும்

மழையில் ஊறிய பிணங்கள்
வரலாற்றின்
ஊற்றுக்கண்களை
அடைத்ததும்
பொன்னிற அரவம்போல்
இருந்தக் கடற்கரையின்
மணற்துகள்களெல்லாம்
பிணவீச்சத்தில்
அதிர்ந்திருக்கும்

பிணம்போல்
பிரக்ஞையற்றுக் கிடந்தவை
நோக்கி
ஆதிக்கப் பிணங்கள்
சிரித்திருக்கும்

பிணங்களின் மீது
எழுந்து நிற்கும்
நகரம்
மீண்டும் மீண்டும்
பிணங்கள் விழுங்கி
இன்னும் இன்னும்
பிணங்களால்
எழுந்து
பிணங்கள் நோக்கி
நகர்ந்து கொண்டே
இருக்கும் நகரம்

No comments:

Post a Comment