Wednesday 26 February 2014

நெகிழித்தாள் மரணம்

ஒளிரும் எதையும்
சேகரிக்கும் காகம்
நிதானமாய் எரித்திருந்தது
வீட்டுக்கூரையை
பழியேற்பதற்காய்
காத்திருக்கும் மின்மினிகளின்
சிறகுகளில்
ஒளிர்வது என்னவென
அறியும்வரை
காகங்களை
நாம் தண்டிப்பதுமில்லை

---------------------------------------------

நெடுஞ்சாலையோரம் கிடந்த
இளரோஜா வண்ண நெகிழித்தாள்
கனரகவாகனம் வீசியெறிந்தப்
பெருங்காற்றில்
தன்னிச்சையாய் எழும்பி
மெல்ல மெல்லப் பெருநகரம் கடந்து
தொலைதூர மலையை
அருகிருக்கும் கடல்தனை
மறைந்துபோன மகவை
காத்திரமானக் காதலை
எஞ்சியிருக்கும் ஈரத்தை
விரும்பமறந்த மனதை
தொடர்ந்துவரும் காமத்தை
சிதறிக்கிடக்கும் நேர்மையை
நேற்றைய கொலைக்கருவியை
கனன்று அணைந்த துரோகத்தை
இரக்கமற்ற தெய்வத்தை
உதிரப்போகும் மலர்களை
கழித்துப்போட்ட பாவங்களாகிய
எல்லாம் தொட்டுவிட்டு
இறுதி இலைகொண்ட
மரக்கிளையில் வந்தமர்கிறது

நீங்கள் சிறுபறவை என்றோ
கவிதையென்றோ
சொல்லிச் செல்கிறீர்
அதனை

நெகிழித்தாளாக
மட்டுமே அது
மரித்துக் கிடந்ததை
அறியாமல்


---------------------------------------------------

No comments:

Post a Comment