Friday 11 October 2013

தேவன் விளக்கம்

இருகைகள் விரித்து
தம்மிடம் தஞ்சம்புகச்
சொல்லி
தேவக்குமாரன்களென
தம்மைத் தாமே 
ப்ரகடனம் செய்திட்ட
அவர்கள் விழிகளில்
வழியும் கருணை
ஏன் அத்தனை
அச்சமூட்டுவதாய்
இருந்ததென
இறுதித் தீர்ப்பு நாளில்
தேவனே விளக்குவார்
என நம்புவோமாக




No comments:

Post a Comment