Friday 11 October 2013

பெயல், இரவு, மருதோன்றி

அத்தனை வேகமாய்
தலையாட்டி
ஆமோதித்துக் கொண்டிருந்தது
அத்தனைப் பெரிய
வேப்பமரம்

பொழியட்டுமா
என வினவிய 
முகிலுக்கான விடையது
என
முற்றுப்புள்ளி வைத்தது
முதல் துளி

------------------------------------------

இந்த இரவைக்
கடந்து கொண்டிருக்கிறேன்
என்பது 
எனக்கு அயர்வையும்
என்னைக் கடந்து கொண்டிருப்பது
இந்த இரவிற்கு
அதிர்வையும்
தரலாம்
நன்று
நாளைய இரவும்
நாளைய நானும்
இன்றிலிருந்து
தொடங்கியாயிற்று---------------------------

----------------------------------------------------------

விரல்களிடை ஓடும்
மருதோன்றிக் கொடியெங்கும்
பூத்திட்ட
செவ்வரளி வருடிச்
செல்கிறது ஈரக்காற்று

காய்ந்து உதிரும்
கரும்பச்சையில்
நீள்மலை விளைந்த
தைலமர வாசம்
செதில் செதிலாய்
படிந்து கிடந்திட
உள்ளீடாய் நுகரலாம்
இரவின் வாசனை


------------------------------------------------------------


2 comments:

  1. வலைச்சரம் மூலமாக வந்தேன்.
    அருமையான கவிதைகள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete