Friday 11 October 2013

கசந்து ஊறும் நெடி

பின்னிரவில் உணர்வதற்கென்றே
தோன்றும் வலியது
என்றோ
மார்புகளின் மத்தியில்
முகம் புதைத்து உறங்கிய
குழந்தையின் பாரமது
எப்போதும்
விழியசைவால் மட்டுமே
தன்னிலை உரைத்த
உரையாடலது
கீழுதட்டின் கீழ்
கசந்து ஊறும்
மருந்து நெடியென
எல்லா இரவுகளிலும்
ஊர்ந்து செல்லும்
காயத்தின் வாசமது
கொடும்வலி தாங்கிய
இரவொன்றின் இறுதியில்
அந்தப் பல்லக்கு
வாயில் வந்தது
ஆம்
முகம் புதைத்திருந்த
அன்றைய குழந்தை
மெல்லப் புரண்டு
படுக்கிறது

No comments:

Post a Comment