Friday 11 October 2013

எது காரணி

செங்கல் உடைக்கும்
பெரும் சத்தமும்
மரம் பிளக்கும்
கொடூர இரைச்சலும்
கடந்து
தூளியில் உறங்கும்
சித்தாளின் மழலை

சலனமில்லா
நித்திரையின் படிமங்கள்
தொங்கும் பாதங்களில்
தூசு படியாதிருக்க
கிழிந்த சேலையொன்று
தூளிசுற்றிக் கட்டியிருக்க

பிற எல்லையினுள்
தவறுதலாய் விழுந்த
பந்தினைப் பொறுக்கச்
செல்வதுபோல்
அந்த ஏகாந்தக் கனவில்
ஒருமுறையேனும்
நுழைந்து அறிந்திட
வேண்டும்
இடைஞ்சலென
மதிக்கத்தக்கக் காரணிகள்
எவையெலாமென

No comments:

Post a Comment