Monday 25 August 2014

விஷக்காலம்

விஷம்போல்
காலம் சொட்டிக் கொண்டிருக்கிறது

புகைப்பட விழிகளை
எத்தனை நேரம்தான்
வெறிப்பது?
மூளைக்குள் எதிரொலிக்கும் குரலின்
நரம்புகளை
எப்படி அறுப்பது?

சட்டைப்பொத்தானில் சிக்கிய
கூந்தலைப் பிரித்தெடுத்தபோது
உயிர் நிரப்பிய வாசம்
ஒரு மிருகம்போல்
எதிரில் நிற்கிறது

விஷம்போல்
சொட்டிக்கொண்டிருப்பது
காலம் மட்டுமேதானா?

No comments:

Post a Comment