Sunday 13 July 2014

பீச் பழங்களை உண்பவளில்லை

மணமக்களின் பின்
பூத்திருந்தன
பீச் வண்ண 
மலர்கள் 

புகைப்படம் எடுத்துக்கொள்ள
மேடையேறியச் சிறுமி
எவருமறியாது
ஒன்றைப் பறித்து
வியர்த்திருந்த கைகளுக்குள்
பத்திரப்படுத்துகிறாள்
அவள் பீச் பழங்களை
உண்பவளில்லை

விரல்களின் வழியே
மேலேறி
அச்சத்தில் துடிக்கும்
அவள் இதயத்தை
பீச் வண்ணப் புகைபோல்
சூழ முயல்கிறது
ஈர மலர்

No comments:

Post a Comment