Sunday 13 July 2014

என் மழலைகள் குறித்து நீங்கள் அறிந்தது இல்லை

இவற்றை
எப்படிச் சொன்னால்
உங்களிடம் மிகச்சரியாய்
வந்து சேரும்?

கையெழுத்துகளின்
பிரதிபோல்
என்னை உபயோகிப்பதை
இனியேனும் நிறுத்துவீர்களா?
உங்கள் மேல் 
எறியப்பட்ட அழுகிய தக்காளிகளை
வழித்தெறிய
டிஷ்யூ காகிதம்போல்
இனியும் என்னை
உபயோகிக்க மாட்டீர்கள்தானே?
உங்கள் மழலைகளை
எவர் அடித்தாலும்
அவரின் இல்லத்தின்
வாசல்வரை
என்னையும் துணைக்கழைப்பதை
இனி முயல மாட்டீர்தானே?

நினைவு கொள்ளுங்கள்
என் மழலைகள்
குறித்து நீங்கள்
அறிந்தது இல்லை
அல்லது
அறிந்ததே இல்லையென
பாவனை செய்கிறீர்கள்

No comments:

Post a Comment